HOME
WHAT ARE WE?
VISION
MISSION
OUR OBJECTIVE
WHY TEC
RESOURCES OF TEC
MEMBERSHIP
CONTACT US
inTECgrate
PRESS
 
மன்றம் எதற்காக?
தொழில் முனைவோரின் நலத்திற்காக முக்கிய பங்கு ஆற்ற முடியும் என மன்றம் உறுதியாக நம்புகிறது. தொழில் முனைவோர் வெற்றியடைய வேண்டுமானால், அவர் சுயமாகவும் உணர்வுபூர்வமாகவும் பொருள் நிலையிலும் உயர வேண்டும். ஆகவே, தொழிலில் வெற்றி இரு பரிமாணங்களைக் கொண்டது. இவ்விரு பரிமாணங்களை இரு சிறகுகள் எனலாம். முதற்சிறகு அவரது மனஉறுதி எனில் இரண்டாம் சிறகு பொருளாதாரமாகும். மன்றமானது தொழில் முனைவோரின் இந்த இரு சிறகுகளையும் நன்றாக செம்மைபடுத்தி விரிவாக்கிட முனையும்.
உதாரணமாக, மன உறுதியற்றவரிடம் பணவசதி இருந்தும், தொழிலை விரிவாக்கிடும் ஆற்றலை எதிர்பார்க்கமுடியாது. அவர் முதலில் தன் மனதில் உள்ள கற்பனை இடர்பாடுகளை களைய வேண்டும். மன்றமானது இச்சூழ்நிலைகளில் அவரிடம் கலந்தாய்வு செய்து அவர் மனதை உறுதிப்படுத்தி அவர்தம் தொழிலை விரிவாக்கிட உதவும்.